rtjy 242 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் நிபா வைரஸ்!! எச்சரிக்கை

Share

இலங்கைக்குள் நிபா வைரஸ்!! எச்சரிக்கை

பல நாடுகளில் பரவி வரும் நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க துறைமுகத்திலோ அல்லது விமான நிலையத்திலோ பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என பொதுப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, இந்த வைரஸ் தெரிந்தோ தெரியாமல் நாட்டுக்குள் தற்போது நுழைந்திருக்கலாம் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கு துறைமுகத்தில் அல்லது விமான நிலையத்தில் எந்த வகையிலும் பாதுகாப்பு நடைவடிக்கைகளும் எடுக்கவில்லை.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் பாரிய அளவிலான மக்கள் நாட்டிற்குள் வந்திருக்கலாம்.

கடற் பிரஜைகளுடன் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்கின்றார்கள், பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்கின்றார்கள், போதை பொருள் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் இதுவரையில் நாட்டிற்குள் நிபா வைரஸ் நுழைந்திருக்கலாம், நுழையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதனால் வைரஸ் நாட்டில் இல்லை என யாரும் நினைக்க வேண்டாம். ஏற்கனவே பரவியிருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.

நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கு பரிசோதனை முறையை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என பொது பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...