இலங்கைசெய்திகள்

கோட்டை – காங்கேசன்துறை இடையே மீண்டும் இரவு நேர தபால் ரயில் சேவை

Share
Train 1
Share

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கும் இடையிலான இரவு நேர தபால் ரயில் சேவை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 10 திகதி முதல் ஆரம்பிக்கவிருந்த நிலையில் அன்று 10 மற்றும் 11 ஆம் திகதி விசேட ரயில் சேவையாக இடம்பெற்றது. இவ்வாறான நிலையில் 19 ஆம் திகதி முதல் தினசரி சேவையாக இரவு நேர தபால் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை அதிகாலை 5.29 மணிக்கு வந்தடைவதுடன் காங்கேசன்துறையை அதிகாலை 6.17 க்கு சென்றடையும்.

காங்கேசன்துறையில் இருந்து இரவு 6.00 மணிக்கு புறப்படும் ரயில் யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை 6.45 மணிக்கு சென்றடைவதுடன் 7.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை அதிகாலை 4.00 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் locomotive இன்ஜினுடன் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ICF ரயில் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது. குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 2 ஆம் வகுப்பு பெட்டிகள், 3 ஆம் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்படுவதுடன் மேலதிகமாக இதுவரை காலமும் இல்லாதிருந்த உறங்கல் படுக்கை(Berth) வசதி பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. பயணிகள் இருக்கை முன்பதிவு வசதியும் செய்யமுடியும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...