அடுத்த வாரமும் பாடசாலைகளுக்கு விடுமுறை!

school closed

பாடசாலைகளின் விடுமுறை அடுத்த வாரமும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் ஆசிரிய தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Exit mobile version