நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை மேலதிக நீதிபதி கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி இன்று உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுகளை மீறி, நீதிமன்றத்தில் முன்னிலையாகாது சட்டவிரோதக் கூட்டத்தின் உறுப்பினர்களாகப் போராட்டம் நடத்தியதற்காக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாகப் பிணையில் உள்ள அவர்கள், நீதிமன்றத்தில் முன்னிலையாகாததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண, ரொஷான் அலி டானிஸ் அலி, அமல் சாலிந்த அல்லது அமி அமில, உதயங்க குமார மற்றும் கொஸ்வத்தகே மஹாநாம தேரர் ஆகியோருக்கே இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

