24 6636daba6826f
இலங்கைசெய்திகள்

அதிக சொத்துக்களை கொண்டவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்:

Share

அதிக சொத்துக்களை கொண்டவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்:

வரிகளை வசூலிப்பதற்காக அடுத்த ஆண்டு (2025) சொத்து வரி, பரிசு மற்றும் பரம்பரை வரியை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது.

மேலும், வருவாய் நிர்வாக நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் வருவாயை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி கூறியுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார விளக்க அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, 2027 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 15 சதவீதத்தை கடந்து வருவாய் இலக்குகளை அடைவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தனிநபர் வருமான வரிக்கு தனிநபர்களின் பதிவு கட்டாயமாக்குதல், அதிக சொத்துக்கள் கொண்ட வரி செலுத்துவோர் மற்றும் வரி செலுத்துவோர் அலகுகளை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வருவாய் நிர்வாகம் மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பை (RAMIS) மேம்படுத்துதல் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி முறையை ஒழித்தல் என்பன நிறுவனங்களின் வருவாய் நிர்வாக நடவடிக்கைகளை மேம்படுத்தும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...

சூறாவளி
இலங்கை

டைபூன் சூறாவளியின் தீவிரம் – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

அரசு தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தகவல்...