24 6654aa1dda66d
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைமுறைக்கு வரவுள்ள விதிமுறைகள்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைமுறைக்கு வரவுள்ள விதிமுறைகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்(Bandaranaike International Airport) வருகை முனையத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் வாகன இயக்கத்தை சீரமைத்தல், பயணிகளின் வசதியை மேம்படுத்துதல் மற்றும் திறமையான விமான நிலைய செயல்பாடுகளை பராமரித்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இதன்படி, வருகை முனையப் பகுதிக்குள் சாரதி இல்லாமல் வாகனங்களை நிறுத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர் அதுல கல்கட்டிய வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த விதி தனியார் கார்கள், வாடகை வாகனங்கள் உட்பட அனைத்து வகையான வாகனங்களுக்கும் பொருந்துவதோடு, அனைத்து வாகனங்களும் பயணிகளை ஏற்றிச்செல்ல பொருத்தமான நேரத்தில், வாகன நிறுத்துமிடங்களிலிருந்து பிரத்தியேகமாக வருகை முனையப் பகுதிக்குள் நுழைய வேண்டும்.

எனினும் இந்த விதிமுறைகளை ஏற்காமல் செயற்பட்டு, குறிப்பாக 30 நிமிடங்களுக்கு மேல் தேவையற்ற போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
yyyyy
உலகம்செய்திகள்

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “(அமெரிக்கா) மோதலில்...

5 4
இலங்கைசெய்திகள்

நீதியரசர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதிகள்!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை, ஒப்புதல் அளித்துள்ளது....

4 5
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி நேற்று(15) தெஹ்ரானில் உள்ள அவர்களின்...

3 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவில் கடும் குழப்ப நிலை

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர...