24 6655714a617c8
இலங்கைசெய்திகள்

புலனாய்வு தகவல் கிடைத்தும் தடுக்கப்படாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

Share

புலனாய்வு தகவல் கிடைத்தும் தடுக்கப்படாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பி்ல் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தும் அதனைத் தடுக்கத் தவறிய அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜயவர்தனவுக்கு(nilantha jayawardena) எதிரான மனுவை பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 25ஆம் திகதி பரிசீலிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று (28) சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

இதன்போது, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனையை தாக்கல் செய்வதற்கான திகதியை வழங்குமாறு பிரதிவாதி நிலந்த ஜயவர்தன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதன்படி, ஜூன் 25ம் திகதி அல்லது அதற்கு முன் ஆட்சேபனை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்னர் இந்த மனு மீதான விசாரணையை ஜூலை 25ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் தந்தை ஜூட் ரொஹான் சில்வாவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...