செய்திகள்இலங்கைபிராந்தியம்

சேதன பசளை உற்பத்திக்கு புதிய கட்ட்டம் – கல்லுண்டாய் வெளியில் அடிக்கல் நாட்டு நிகழ்வு

Share
VideoCapture 20220206 155130
Share

யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் வெளியில் திண்மக்கழிவுகளை கொண்டு சேதன பசளை உற்பத்தி செய்வதற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கல்லூண்டாய் வெளியில் திண்மகழிவுகளை அகற்ற பிரதேச சபைக்கு வழங்கப்பெற்ற10ஏக்கர் நிலப்பரப்பில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் திண்மக்கழிவு முகாமைத்துவம் செய்து சேதன பசளை உற்பத்தி நிலையத்தின் அமைக்கப்படவுள்ளது.

குறித்த பிரதேச சபையால் ஏற்கனவே கல்லூண்டாய் தரிசு நிலத்தில் மண் நிரப்பப்பட்டு சேதன பசளை உருவாக்குவதற்கான நிலையம் அமைக்கப்பெற்று வடமாகாணத்தில் குறித்த சேதன பசளை நிலையம் முண்ணணி வகித்து வரும் நிலையில் இன்று மேலுமொரு நிலையத்திற்கு ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இத்திண்மக் கழிவுகளை தரம்பிரிக்கும் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இதனையடுத்து ஏற்கனவே அமைக்கப்பெற்ற சேதன பசளை நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சேதன பசளைகளும் இயந்திர தொகுதிகளும் பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசனால் விருந்தினர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார், சண்டிலிப்பாய் கமநல பெரும்போக உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவலர், பிரதேச சபையின் செயலாளர், சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VideoCapture 20220206 155124 VideoCapture 20220206 155130VideoCapture 20220206 155301 VideoCapture 20220206 155243 VideoCapture 20220206 155257 VideoCapture 20220206 155219

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...