24 661319e2793af
இலங்கைசெய்திகள்

கச்சதீவு விவகாரம் தொடர்பில் வெளியான தகவல்

Share

கச்சதீவு விவகாரம் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கைக்கு கச்சதீவை கொடுப்பதற்கு முன்னர் தமிழ்நாட்டின் இராமநாதபுரத்துக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வருகை தந்து ராஜா இராமநாத சேதுபதியிடம் ஆலோசனை நடத்தியதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்களவைத் தேர்தல் களத்தில் கச்சதீவு விவகாரம் பாரதிய ஜனதாவினால் பேசுபொருளாக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் கச்சதீவை காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகக்கூட்டு சேர்ந்து இலங்கைக்கு கொடுத்துவிட்டதாக பாரதீய ஜனதா குற்றம் சுமத்தியுள்ளது.

இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக இராமநாதபுரம் சமஸ்தானத்தின் தற்போதைய ராணி லெட்சுமி நாச்சியார் ஊடகமொன்றிற்கு செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.

அதில், மக்கள் நலனுக்காக இலங்கைக்கு அப்போதைய மத்திய அரசு கச்சதீவை கொடுத்தது. இதற்கு இராமநாதபுரம் சமஸ்தானம் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும். கச்சதீவை இலங்கைக்கு கொடுப்பதற்கு முன்னர் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, இராமநாதபுரத்துக்கு வருகைத்தந்தார் அப்போது இராமநாதபுரம் ராஜாவாக இருந்த இராமநாத சேதுபதியுடன் இந்திரா காந்தி பேச்சுவார்த்தையும் நடத்தினார்.

எனினும் கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதால் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கச்சதீவை மீண்டும் பெறுவதற்கு மத்திய அரசு முயற்சித்தால் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் சார்பாக தாமும், தமது மகன் நாகேந்திர சேதுபதியும் உதவுவோம் என்று ராணி லெட்சுமி நாச்சியார் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 691b58dca001e
செய்திகள்அரசியல்இலங்கை

பசில் ராஜபக்சவுக்கு நவ. 21இல் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு: அமெரிக்காவில் சிகிச்சையிலுள்ளவர் திரும்புவாரா என்ற சந்தேகம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நிறுவனர் பசில் ராஜபக்ச, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட ரூ. 50 மில்லியன்...

25 691be54fdfdbd
செய்திகள்அரசியல்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: முறையாகப் பதிவுசெய்யப்பட்ட விகாரை அகற்றப்பட்டதைக் கண்டித்து அமரபுர மகா நிக்காய தலைமை தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம்!

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் தலைமை நாயக்க...

Vijayakanth Viyaskanth SRH IPL 2024 1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைவு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில், இளம் சுழற்பந்து...

67e090cde912a.image
உலகம்செய்திகள்

கனடாவின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடி: இஸ்ரேல் ஆதரவுக் குழுவின் தஃப்சிக் அமைப்பு தடை கோரி நீதிமன்றம் நாடியது!

கனடாவின் பல நகரங்களின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...