1 21
இலங்கைசெய்திகள்

தாமதமாகும் விமானங்கள்: சிறிலங்கன் எயார்லைன்ஸ் எடுத்துள்ள முடிவு

Share

இந்த ஆண்டின் முதல் பாதியில் சிறிலங்கன் எயார்லைன்ஸிற்கு (SriLankan Airlines) மூன்று புதிய விமானங்கள் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, விமான குழுவில் சேர்ப்பதற்காக நிறுவனம் விமானங்களை தேடி வருவதாக கூறப்படுகிறது.

போதுமான விமானங்கள் இல்லாததால் விமான தாமதங்களைச் சமாளிக்க சிறிலங்கன் எயார்லைன்ஸ் தற்போது சிரமப்பட்டு வருகிறது.

2022 ஏப்ரல் மாதம் முதல் 2023 செப்டம்பர் மாதம் வரை, 548 விமானங்கள் 3 முதல் 56 மணி நேரம் வரை தாமதமாகியுள்ளதாக அறிக்கையும் வெளியாகியது.

அத்தோடு, இந்த தாமதங்களை தவிர்பதற்கு ஏனைய விமான நிறுவனங்களின் உதவியைப் பெற 2023 ஆம் ஆண்டில் நிறுவனம் $784,000 செலவிட்டது.

இந்த நிலையில், போதுமான விமானங்கள் இருந்தால், மற்ற விமான சேவைகளுக்குச் செலவிட வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டிப்படுகிறது.

இவ்வாறதொரு பின்னணியில், சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தேவை மதிப்பீட்டின் படி, 27 விமானங்கள் தேவைப்படுகின்றன, ஆனால் தற்போது 21 மட்டுமே உள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...