எரிவாயுக் கொள்கலன்களுக்கான தட்டுப்பாட்டு நிலைமை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான கேள்வி சுமார் இரண்டு இலட்சமாகக் காணப்பட்டது. எனினும், தற்போது அந்த எண்ணிக்கை 90 ஆயிரமாக காணப்படுகின்றது.
இந்நிலையில், தற்போது விநியோகத்திற்கு தேவையான சமையல் எரிவாயு கொள்கலன்கள் இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை எனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறியளவிலான வர்த்தக நிலையங்களுக்கும் அடுத்த வாரத்தில் இருந்து தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
#SrilankaNews
Leave a comment