Sri Lanka Podujana Peramuna slpp 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மொட்டு எம்பிக்களை ஒன்றிணைக்க புதிய கூட்டணி

Share

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளை பொதுவானதொரு கூட்டணியின்கீழ் ஒன்றிணைப்பதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன.

இதற்கான அரசியல் ரீதியிலான நகர்வுகளை முன்னெடுப்பதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

மொட்டு கூட்டணியில் இருந்து வெளியேறிய விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, அத்துரெலிய ரத்தன தேரர் உட்பட 8 கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து ‘மேலவை இலங்கை கூட்டமைப்பு’ எனும் பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

அதேபோல டலஸ் அழகப்பெரும தலைமையிலான 13 எம்.பிக்கள் அடங்கிய குழுவும், ‘சுதந்திர மக்கள் சபை’ எனும் அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ளது.

அநுரபிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி உள்ளிட்டவர்கள் தனி அணியாக செயற்படுகின்றனர். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தற்போது தனித்தே இயங்கிவருகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி கட்சிகளை – சக்திகளை ஒரு குடையின் – கூட்டணியின்கீழ் கொண்டுவருவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...