maithripala sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

விரைவில் புதிய கூட்டணி!!

Share

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏனையக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கும் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் நாளில் எம்மோடு யார் இருக்கிறார்கள் என்பது தெரியவரும் எனவும் தெரிவித்தார்.

அநுராதபுரத்தின் ஜெய ஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளை மேற்கொண்டப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் நானும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் இணைந்து செயற்பட தீர்மானித்தோம். அப்போது எனக்கு ஜனாதிபதி பதவியும் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதிவியும் கிடைத்தது.  எனக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்கள். என்னை அவமதித்தார்கள். என்னை அவமதித்து எனக்கு எதிராக சேறுபூசியவர்களுக்கு இப்போது ஜனாதிபதி பதவியும் இல்லை பிரதமர் பதவியும் இல்லை என்றார்.

கூட்டணி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் நாளில் எம்மோடு யார் இருக்கிறார்கள் என்ப​தை அனைவரும் அறிந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.

எமது கட்சியை விட்டுச் சிலர் சென்றுவிட்டார்கள் என எமது கட்சிக்குள் எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படவில்லை. கட்சியில் ஏற்பட்டிருந்த வெற்றிடங்களுக்கு திறமையான, அறிவார்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளையே தற்போது செய்து வருகிறோம். ஜனவரி முதல் மக்களுக்கு எமது புதிய ​வேலைத்திட்டங்களை அறிவிக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....