WhatsApp Image 2022 04 04 at 4.35.22 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுடன் இணையோம்! – அநுர விடாப்பிடி

Share

” ரணில், ராஜபக்ச ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கிலேயே சர்வக்கட்சி அரசு அமைக்கப்படுகின்றது. இந்த அரசில் நாம் இணையமாட்டோம். எனவே, 6 மாத காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.”

இவ்வாறு அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

சர்வக்கட்சி அரசமைப்பது தொடர்பில் பேச்சு நடத்த வருமாறு தேசிய மக்கள் சக்திக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.
குறித்த அழைப்பை ஏற்று பேச்சுக்கு செல்வதற்கு ஜே.வி.பி. மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் தமது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார்.

தமது கட்சி ஏன் சர்வக்கட்சி அரசை ஏற்கவில்லை என்பதை குறித்த கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ள அநுர குமார திஸாநாயக்க, ஆட்சியை நீடிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இல்லை எனவும் குறிப்பிட்டார்.

” சர்வக்கட்சி அரசை, இடைக்கால அரசாகக் கருதி அந்த அரசை 06 மாதங்களுக்கு குறுகிய காலத்திற்கு மட்டுப்படுத்தி பின்னர் பொதுத்தேர்தலை நடாத்தி புதிய ஆணையுடன் மக்கள் விரும்பிய அரசை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். ஆனால் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் தெளிவான திட்டம் இல்லை.” – எனவும் தேசிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...