அரசியல்இலங்கைசெய்திகள்

IMF அறிக்கை தொடர்பில் உடனடி விவாதம் வேண்டும்! – முரண்டுபிடிக்கும் எதிர்க்கட்சி

Share
Tissa Attanayake
Share

” இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கை தொடர்பில் அடுத்த வாரமே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

” மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்று பல மாதங்கள் ஆகின்றன. எனினும், நெருக்கடியான நிலையில் இருந்து மீள அவரால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் இன்று அமுல்படுத்தப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு மத்திய வங்கி ஆளுநர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார். ஆனால் நாடும் நிலைப்பாட்டில் அரசு உள்ளது. எனவே, ஆளுநர் எவ்வாறு தன்னிச்சையாக செயற்பட முடியும்?

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கைமீது உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும். அடுத்தவாரமே எமக்கு விவாதம் அவசியம்.” – என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...