பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற கையோடு, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளன.
அதேவேளை, பிரதமர் ரணில் விரைவில் இந்தியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சீனா உள்ளிட்ட மேலும் சில நாடுகளின் தூதுவர்களும் ரணிலை சந்திக்கவுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment