மன்னாரில் கடற்படையினர் தீவிர நடவடிக்கை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தமிழகத்துக்குத் தப்பிச் செல்வோரைத் தடுக்க மன்னாரில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு!

Share

இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வோரைத் தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை மன்னாரில் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை மற்றும் வருமானம் இன்மை காரணமாகப் பலரும் தமிழகத்துக்குத் தப்பியோடி வருகின்றனர். இதன்காரணமாக இராஜதந்திர ரீதியில் அழுத்தங்கள் அதிகமாகக் காணப்படும் என்பதால் தமிழகத்துக்குத் தப்பியோடுவோரைத் தடுப்பதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதிக்குப் பின்பு இலங்கையில் இருந்து 39 பேர் தமிழகத்துக்கு அகதிகளாகத் தப்பிச் சென்றுள்ளதால் அதனைத் தடுக்க கடற்படையினர் மற்றும் இரணுவத்தினர் மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதற்காகக் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கடற்படையினரின் அதிகாரிகள் கூட்டம் நடத்திய அதேநேரம் இராணுவ அதிகாரிகளும் சந்திப்பை மேற்கொண்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...