அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்டெடுக்க தேசிய வேலைத்திட்டம் அவசியம்! – ஐ.தே.க வலியுறுத்து

277436465 5120352351357922 1168270418110427463 n
Share

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியால் கொழும்பில் இன்று சத்தியாக்கிரக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த அறவழிப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றதுடன், பொது இணக்கப்பாட்டுடனான தேசிய வேலைத்திட்டமொன்றை வலியுறுத்தினர்.

சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வெள்ளை அணி அணிந்திருந்தனர். அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பவில்லை. ஆட்சி மாற்றத்தையும் வலியுறுத்தவில்லை. மாறாக நாட்டை மீட்பதற்கான தேசிய வேலைத்திட்டம் வேண்டும் என்றே கருத்து வெளியிட்டனர்.

சத்தியாக்கிரக போராட்டத்தின் நிறைவில், எமது நாட்டை ஒன்றிணைந்து காப்போம் என சத்தியப்பிரமாணமும் செய்யப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்தியாக்கிரக போராட்டத்தில், சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆம் படையணியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

சம்பிக்க ரணவக்க கலந்துகொள்ளாதபோதிலும், அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றிருந்தனர்.

277248570 5120354934690997 5714042106926061799 n

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...