12
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாட்டை ஒன்றிணைக்கும் தேசிய “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்”ஆரம்பம்!

Share

நாட்டை ஒன்றிணைக்கும் தேசிய “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” இன்று (01.03.2026) முதல் ஆரம்பமாகிறது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “நாட்டை ஒன்றிணைக்கும்” தேசிய செயல்பாட்டுச் சபை (Ratama Ekata National Initiative) இந்த வாரத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது. அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 07/2026 இலக்க அரச நிர்வாகச் சுற்றறிக்கை இதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தி ஒடுக்குதல் மற்றும் அடிமையானவர்களை மீட்டு புனர்வாழ்விற்கு உட்படுத்துதல் ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களை இலக்காகக் கொண்டு இந்த வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் அடிமட்ட ரீதியில் பரந்தளவிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அரச அமைச்சுகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் அதிகாரிகளின் பங்களிப்புடன் விழிப்புணர்வுத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இலக்கு வைத்து பல்வகைப்படுத்தப்பட்ட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. அதேபோல், பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...