நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரசும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
தேசிய காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சு பதவி ஏற்காதிருக்கவும், எதிரணியில் இருந்து மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment