dinesh gunawardena 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி தேசிய சபை!

Share

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபையை ஸ்தாபிப்பதற்கான வரைபை பிரதமர் தினேஷ் குணவர்தன கட்சித் தலைவர்களிடம் முன்வைத்தார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்திலேயே அவர் இதனை முன்வைத்தார்.

நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களை அமைப்பது தொடர்பான அரசாங்கத்தின் யோசனை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இங்கு கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்ததுடன், நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் பொது உடன்படிக்கையின் மூலம் அரசியல் தீர்மானங்களை வழிநடத்துவதே இதன் நோக்கமாக இருக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

தேசிய சபை மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் குறித்த அரசாங்கத்தின் வரைவு யோசனை தொடர்பில் அந்தந்த கட்சிகளின் நிலைப்பாட்டை எழுத்து மூலம் பெற்றுக்கொள்வது என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கருத்துக்களுடன் மெருகூட்டப்பட்ட வரைபை பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூடவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன் வைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

17 துறைசார் மேற்பார்வை குழுக்கள் மற்றும் 12 நிலையான குழுக்களுக்கு மேலதிகமாக மூன்று குழுக்களை அமைப்பது தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணையும் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சுயாதீனமானவர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஈ.பி.டி.பி, தேசிய காங்கிரஸ் போன்ற பாராளுமன்றத்தைப் பிரதிநிதப்படுத்தும் கட்சிகளின் குழுத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா ஸ்தம்பிக்குமா? ஒரு வார கால முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள ‘he Great British National Strike அமைப்பு!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு...

Dead 1200px 22 10 28 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: மகள் மூட்டிய குப்பைத் தீ பரவி படுக்கையில் இருந்த தாய் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில்...

archuna bail
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம்...

virat kohli 183099488 sm
விளையாட்டுசெய்திகள்

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீர் மாயம்: நள்ளிரவு ‘ஷாக்’ கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பிய ‘கிங்’!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) அதிகாலை...