tamilni 341 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

நரேந்திர மோடியின் நல்லூர் கோவிலுக்கான விஜயம் தொடர்பில் தகவல்

Share

நரேந்திர மோடியின் நல்லூர் கோவிலுக்கான விஜயம் தொடர்பில் தகவல்

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான பயணம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்களை இந்தியாவின் முன்னாள் துணை தூதர் நடராஜன் வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்ட போது புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளவில்லை.

இதற்கான காரணம் என்ன என்பதை நடராஜன் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தபோது நல்லூர் கோவில், மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், காங்கேசன்துறை நகுலேஸ்வரன் கோவிலுக்கு,அவரை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது.

இது தொடர்பாக நல்லூர் கோவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி குமாரதாச மாப்பன முதலியாருடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது.

அப்போது, கோவிலுக்குள் மேலாடை அணியாமல்தான் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே கோவில் நடை திறக்கப்படும் என்ற மரபுகளில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது என நல்லூர் தேவஸ்தான அதிகாரி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் நல்லூர் முருகன் கோவிலுக்கு பிரதமர் மோடியால் செல்ல முடியவில்லை. எனினும் காங்கேசன்துறை நகுலேஸ்வரன் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

அப்போது அங்கு 98 வயதான நகுலேஸ் குருக்கள் உடனிருந்தார். தற்போது அவர் காலமாகிவிட்டார் என்று ஏ.நடராஜன் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதராக ஏ.நடராஜன், 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

இந்தநிலையில் அவர், ‘From the Village to the Global Stage’ என்ற தலைப்பில் புதிய நூல் ஒன்றை எழுதி உள்ளார்.

இந்த நூல் விரைவில் கோவையில் வெளியிடப்படவுள்ளது.

இந்த நூலில் பிரதமர் மோடியின் யாழ்ப்பாண பயணம் தொடர்பான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...