13 20
இலங்கைசெய்திகள்

வரவு செலவு திட்டம் தொடர்பில் வீரசிங்க பெருமிதம்

Share

வரவு செலவு திட்டம் தொடர்பில் வீரசிங்க பெருமிதம்

சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்படுத்தல் திட்டத்தின் அளவுருக்களின்படி செயல்படுவது அரசாங்கத்தின் பொறுப்பு என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க(nandalal weerasinghe) கூறியுள்ளார்.  இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாட்டிற்கு ஒரு நல்ல விடயங்களை உள்ளடக்கியுள்ளது என கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,  “அரசாங்கத்தின் இலக்கைப் பார்க்கும்போது, இந்த முறை நாம் வரவு செலவு திட்டதில் அதிக நம்பிக்கை வைக்க முடியும். அரசாங்கப் பத்திரங்கள் மீதான குறுகிய கால அழுத்தங்களை உள்வாங்க ஹெட்ஜிங்கைப்(சொத்துகளிலிருந்து இழப்பு ஏற்படும் போது அபாயத்தைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட சொத்தை வாங்கும் செயற்பாடு) பயன்படுத்துவது முக்கியமாகும்.

நமது பணவியல் கொள்கையின்படி நிலையான வட்டி விகிதங்களை பராமரிக்க உதவும். பல ஆண்டுகளாக IMF உடனான விவாதங்களில் பங்கேற்ற ஒருவர் என்ற ரீதியில், இந்த முறை ஒரு நாடாக, ஒட்டுமொத்த பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக சரியான திசையில் செல்ல வெளிப்புற பங்குதாரர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் வரவு செலவு திட்டத்தில் மாறவில்லை என்று என்னால் கூற முடியும்.

நிர்வாகத்தில் மாற்றம் இருந்தபோதிலும், பேரண்டப் பொருளாதாரக் கொள்கைகளின் திசை மாறவில்லை. IMF இன் ஒட்டுமொத்த பெரிய பொருளாதார நிலைப்படுத்தல் திட்டத்தின் அளவுருக்களுக்குள் செயல்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாக இருப்பதால், இதை நேர்மறையான அறிகுறியாக நான் பார்க்கிறேன்” என்றார்.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...