Sri
இலங்கைசெய்திகள்

பெயர் மாற்றமே அழிவுக்கு காரணம்!!

Share

பெயர் மாற்றமே அழிவுக்கு காரணம்!!

சிலோன் என்ற பெயரிலிருந்து ஸ்ரீ லங்கா என இந்நாட்டின் பெயரை மாற்றியது தான் இவ்வளவு காலமாக நாடு அழிவுக்கு உள்ளாவதற்கான காரணம் என விஞ்ஞான எழுத்தாளர் மற்றும் வான சாஸ்திரியான அநுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.

“எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாராநாயக்க மற்றும் விஜய குமாரதுங்கவின் படுகொலையிலிருந்து நஷ்டமடைந்த பல நிறுவனங்கள் வரை ஸ்ரீ என்ற சொல் பாரிய அழிவைக் கொண்டுள்ளது. இலங்கையின் இறுதி அரசனின் பெயர் கூட ஸ்ரீ விக்ரமராஜசிங்க தான்“ என அவர் மேலும் விளக்கமளித்தார்.

அரசியல் தலைவர்களின் பெயர், அரசியல் கட்சிகளின் பெயர், அரச நிறுவனங்களின் பெயர் மற்றும் நாட்டின் பெயருக்கு முன் ஸ்ரீ என்ற சொல்லை பாவிப்பது தான் நாட்டை இந்த வங்குரோத்து நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

1956 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உருவாக்கத்திலிருந்து எமது நாட்டிற்கு துரதிஷ்டம் வந்தது.

அக்கட்சியை நிறுவிய பண்டாரநாயக்க, வாகன எண் பலகைகளில் ஸ்ரீ எனும் எழுத்தை  சேர்த்தார். பின் நாட்டில் சிங்கள-தமிழ் இனக் கலவரம் தோன்றி பெரும் உயிர் உடைமைடகள் சேதம் ஏற்பட்டது. பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனர் படுகொலை செய்யப்பட்டார்“ என அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...