Untitled 1 36 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு துணை நிற்கும் சீனா

Share

இலங்கையும், சீனாவும் நீண்டகால நண்பர்களாக இருந்து வருவதால், இரண்டு தரப்புக்கும் நன்மைகள் கிடைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கை – சீன நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களான 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சீனாவின் அரசாங்கம் நடத்தும் செய்தி ஊடகமான – ஜிஜிடிஎன்க்கு நாமல் ராஜபக்ச தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதன்போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இக்கட்டான காலங்களில் இலங்கைக்கு சீனா துணை நின்றது, அதே போன்று இலங்கையும் எப்போதும் ஒரே சீன கொள்கையை கடைபிடித்து வருகிறது என்று அவர் இதன்போது கூறியுள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் இலங்கை ஜனாதிபதி, சீனாவுக்கு விஜயம் செய்வார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவின் ‘கடன் பொறி இராஜதந்திரம்’ குறித்து கருத்துரைத்த நாமல் ராஜபக்ச, இலங்கை கடந்த இரண்டு தசாப்தங்களாக புவிசார் அரசியலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 11
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: இலங்கையின் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் சஜித் பிரேமதாசவின் 4 முக்கிய பரிந்துரைகள்!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தக்கூடிய...

09 11
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை ஊடாக இந்தியக் கப்பல்கள்: ஈரான் அனுமதி வழங்கியதாகத் தகவல்; ஆனால் டெஹ்ரான் மறுப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், இந்தியக் கொடியுடன் பயணிக்கும் எண்ணெய் கொள்கலன்களை (Oil...

08 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

‘சிசு செரிய’ பாடசாலை போக்குவரத்து சேவை விஸ்தரிப்பு: 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இணைப்பு!

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ‘சிசு செரிய’ (Sisu...

07 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதல்: போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் முன்வைத்துள்ள 3 நிபந்தனைகள்!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு,...