Untitled 1 36 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு துணை நிற்கும் சீனா

Share

இலங்கையும், சீனாவும் நீண்டகால நண்பர்களாக இருந்து வருவதால், இரண்டு தரப்புக்கும் நன்மைகள் கிடைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கை – சீன நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களான 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சீனாவின் அரசாங்கம் நடத்தும் செய்தி ஊடகமான – ஜிஜிடிஎன்க்கு நாமல் ராஜபக்ச தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதன்போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இக்கட்டான காலங்களில் இலங்கைக்கு சீனா துணை நின்றது, அதே போன்று இலங்கையும் எப்போதும் ஒரே சீன கொள்கையை கடைபிடித்து வருகிறது என்று அவர் இதன்போது கூறியுள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் இலங்கை ஜனாதிபதி, சீனாவுக்கு விஜயம் செய்வார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவின் ‘கடன் பொறி இராஜதந்திரம்’ குறித்து கருத்துரைத்த நாமல் ராஜபக்ச, இலங்கை கடந்த இரண்டு தசாப்தங்களாக புவிசார் அரசியலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...