2 41
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் விருப்பமின்றி களமிறக்கப்பட்ட நாமல்: நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படை

Share

மகிந்தவின் விருப்பமின்றி களமிறக்கப்பட்ட நாமல்: நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படை

மகிந்த ராஜபக்ச, மனப்பூர்வமாக நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தங்களை அனுப்பி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) வாக்களிக்க கூறியவரும் மகிந்த ராஜபச்சவே என்றும் மகிந்தானந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், “ராஜபக்ச குடும்பத்தில் உள்ள அனைவரும் இணைந்து தான் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க கூறினார்கள்.

நாமலுக்கு இது சரியான நேரமல்ல என மகிந்த ராஜபக்ச தெளிவாக தெரிவித்திருந்தார், என்றாலும் நாமலின் கடும் கோரிக்கை காரணமாக வேட்பாளராக களமிறக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

இன்றும் மகிந்த ராஜபக்ச அவரது மனசாட்சிக்கு உட்பட்டு ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...