தற்போதைய சூழ்நிலையில் நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சு பதவி வழங்கமுடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பஸில் ராஜபக்ச உட்பட மொட்டு கட்சியின் பிரமுகர்கள் சிலர், நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சு பதவியை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். எனினும், தற்போதைய சூழ்நிலையில் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார். ரணிலின் கருத்துடன் மஹிந்தவுடன் உடன்பட்டுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
#SriLankaNews
Leave a comment