பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தேரேறி வந்த நல்லூர் கந்தன்

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம் இன்று காலை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இன்று காலை 6.15 மணியளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து, சண்முகப்பெருமான் தேரில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்தார்.

தேர்த்திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆசார சீலர்களாக அதிகாலை முதல் ஆலயத்தின் நாலா புறங்களிலுமிருந்து வருகை தந்தனர்.

அடியாளர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும் அடி அழித்தும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியதுடன், நூற்றுக் கணக்கான காவடிகளும் வருகை தந்திருந்தன.

20220825 081741

#SriLankaNews

Exit mobile version