நளினியின் மனுவிற்கு நீதிமன்றின் உத்தரவு
இந்தியாஇலங்கைசெய்திகள்

நளினியின் மனுவிற்கு நீதிமன்றின் உத்தரவு

Share

நளினியின் மனுவிற்கு நீதிமன்றின் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதியான நளினி ஸ்ரீஹரன் (நளினி முருகன்), தனது கணவர் ஸ்ரீஹரனை வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு சிறை முகாமில் இருந்து விடுவிக்க கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் விடுவிக்கப்பட்ட முருகன் என்ற ஸ்ரீஹரன், திருச்சி மத்திய சிறைக்குள் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு, இலங்கை குடியுரிமை காரணமாக அந்த வளாகத்தை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் தனது நெருங்கிய குடும்பத்தை மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்.

இந்த நிலையில், நளினியின் மனுவை ஏற்று கொண்ட நீதிபதி, தமிழக அரசாங்கம் மற்றும் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அதிகாரி (FRRO) ஆறு வாரங்களுக்குள், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நளினி தனது மனுவில், தனது மகள் ஹரித்ரா இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளதாகவும், எனவே தமது கணவர் இங்கிலாந்தில் மகளுடன் வாழ விரும்புகிறார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காக அவர் தனது கடவுச்சீட்டை பெற இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், எனினும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போது அவரால் அதனை மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசாங்கத்தின் கொள்கையின்படி, வெளிநாட்டினர், சிறையில் இருந்து விடுதலையானதும், சில நிபந்தனைகளின் கீழ் மாநிலத்தில் குடும்பத்துடன் வசிக்க அனுமதிக்கப்படுவதாக நளினி குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, மற்றவர்கள் தங்களுக்கு விருப்பமான வெளிநாடுகளில் தஞ்சம் கோர அனுமதிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், வெளிநாட்டவர்களின் பிராந்திய பதிவு அலுவலகத்தின் உத்தரவு காரணமாக, ஸ்ரீஹரன் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் வரை முகாமில் இருந்து வெளியேறுவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நளினி சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...