நளினியின் மனுவிற்கு நீதிமன்றின் உத்தரவு
இந்தியாஇலங்கைசெய்திகள்

நளினியின் மனுவிற்கு நீதிமன்றின் உத்தரவு

Share

நளினியின் மனுவிற்கு நீதிமன்றின் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதியான நளினி ஸ்ரீஹரன் (நளினி முருகன்), தனது கணவர் ஸ்ரீஹரனை வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு சிறை முகாமில் இருந்து விடுவிக்க கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் விடுவிக்கப்பட்ட முருகன் என்ற ஸ்ரீஹரன், திருச்சி மத்திய சிறைக்குள் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு, இலங்கை குடியுரிமை காரணமாக அந்த வளாகத்தை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் தனது நெருங்கிய குடும்பத்தை மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்.

இந்த நிலையில், நளினியின் மனுவை ஏற்று கொண்ட நீதிபதி, தமிழக அரசாங்கம் மற்றும் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அதிகாரி (FRRO) ஆறு வாரங்களுக்குள், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நளினி தனது மனுவில், தனது மகள் ஹரித்ரா இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளதாகவும், எனவே தமது கணவர் இங்கிலாந்தில் மகளுடன் வாழ விரும்புகிறார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காக அவர் தனது கடவுச்சீட்டை பெற இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், எனினும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போது அவரால் அதனை மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசாங்கத்தின் கொள்கையின்படி, வெளிநாட்டினர், சிறையில் இருந்து விடுதலையானதும், சில நிபந்தனைகளின் கீழ் மாநிலத்தில் குடும்பத்துடன் வசிக்க அனுமதிக்கப்படுவதாக நளினி குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, மற்றவர்கள் தங்களுக்கு விருப்பமான வெளிநாடுகளில் தஞ்சம் கோர அனுமதிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், வெளிநாட்டவர்களின் பிராந்திய பதிவு அலுவலகத்தின் உத்தரவு காரணமாக, ஸ்ரீஹரன் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் வரை முகாமில் இருந்து வெளியேறுவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நளினி சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...

24 66c584aba0b91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெல்லவாய – தனமல்வில விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

வெல்லவாய – தனமல்வில வீதியில் உள்ள தெல்லுல்லப் பகுதியில் இன்று (டிசம்பர் 15) ஏற்பட்ட கோர...