rtjy 151 scaled
இலங்கைசெய்திகள்

ஐ.நா பேரவையில் பேசும் வாய்ப்பை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Share

ஐ.நா பேரவையில் பேசும் வாய்ப்பை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அண்மையில் ஜெனீவாவிற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில் பேசும் வாய்ப்பை இழந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுவாக ஒரு பிரச்சினையை எழுப்ப விரும்பும் ஒருவருக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வுகளில் பேசுவதற்கு ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும்.

இதன் அடிப்படையில் தமது சகாவான ஹெக்டர் அப்புஹாமிக்கு அமர்வுகளில் 45 வது இடம் வழங்கப்பட்டது. ஆனால் நாள் முடிவில் அவர் அமர்வுகளில் பேச நேரம் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் குறித்த விவகாரத்தை விரைவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு எடுத்து செல்லவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்புஹாமி, உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்கள் பற்றிய பிரச்சினையை எழுப்ப இருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தாங்கள் தங்கள், சொந்த பணத்தை சுற்றுப்பயணத்திற்காக செலவிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...