ffl scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி மர்ம ஒலியால் ஆபத்து

Share

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி மர்ம ஒலியால் ஆபத்து

இலங்கையின் மலையகப் பகுதியில் கேட்கும் மர்ம ஒலியினால் பாதகமான நிலைமை ஏற்படலாம் என பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொத்மலை, ஹெதுனுவெவ வேத்தலாவ பகுதியில் உள்ள மைதானத்தில் இருந்து வரும் மர்ம சத்தம் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தப் பகுதி மக்கள் அச்சம் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ள நிலையில், அது குறித்து உடனடி தீர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் பேராதனை புவியியல் மற்றும் சுரங்கப் பிரிவின் முன்னாள் புவியியல் மற்றும் சுரங்கப் பிரிவின் பேராசிரியர் அதுல சேனாரத்னவின் தலைமையில் நேற்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபடவின் வேண்டுகோளுக்கமைய, புவியியல் மற்றும் சுரங்கப் பிரிவின் முன்னாள் தலைவரும், புவியியல் பேராசிரியருமான அதுல சேனாரத்னவின் பங்களிப்புடன், பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறை அதிகாரிகளால் இந்த நிலம் தோண்டப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

மர்ம ஒலி வரும் பகுதிகளில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பகுதியில் ஏரி இருந்தமையினால் அந்த பகுதிக்கு அடியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அது தீவிரமான சூழ்நிலை இல்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளார்.

எனினும் அது எதிர்காலத்தில் பாரதூரமான நிலைமையாக மாறும் நிலை காணப்படுவதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இடத்தை அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்து, புவியியல் மற்றும் சுரங்கப் பிரிவின் ஆய்வு அறிக்கையை அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.

Share
தொடர்புடையது
4 19
உலகம்செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை! புடினின் அறிவிப்புக்காக காத்திருக்கும் இஸ்தான்புல்

இஸ்தான்புல்லில் நாளை நடைபெறவிருக்கும் ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்...

3 20
உலகம்செய்திகள்

அமெரிக்காவிடமிருந்து நூற்றுக்கணக்கான விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்வதற்காக கட்டார் ஒப்பந்தம் செய்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump)...

2 28
உலகம்செய்திகள்

நீண்டகால எதிரிகளை ஒன்றினைய வலியுறுத்தும் அமெரிக்கா

இஸ்லாமியவாத தலைமையிலான அரசாங்கத்தின் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்குவதாக அமெரிக்கா திடீரென அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு...

1 18
இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர

உள்ளுராட்சி மன்றங்களில் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக செயற்படும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை...