தமிழ் நாடு என்னை புரிந்துகொள்ளவில்லை: முரளிதரன்
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினை தமிழ் நாடு சரியாக புரிந்துகொள்ளத் தவறியதால் தான் தேசத்துரோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்ற போர் மற்றும் அன்றைய இலங்கையின் உண்மை நிலவரத்தை தமிழ் நாடு புரிந்து கொள்ளத் தவறிவிட்டது என்று கூற தாம் அஞ்சப்போவதில்லை. அதற்குக் காரணம், தமிழகத்தைப் போலல்லாமல், இலங்கையில் காணப்படும் பல்வேறு சூழல்கள்.
இலங்கையில் தமிழ் சமூகத்தில் உள்ள பல்வேறு குழுக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆனால் அவை அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளன.
அந்த குழுக்களில் உள்ள சிலர் இலங்கையின் ஒரு பகுதியை உடைத்து தனி நாட்டை உருவாக்க விரும்புகின்றனர். ஆனால் சிலர் அவ்வாறு செய்ய விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.