ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும்!! – சஜித் வலியுறுத்து

sajith 3

” மக்கள் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மக்கள் கட்டுப்படவில்லை. நாட்டுக்காக வீதியில் இறங்கியுள்ளனர். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என கோருகின்றனர்.

இந்த கோரிக்கையை ஏற்று ஜனாதிபதியும், அரசும் பதவி விலக வேண்டும். இடைக்கால அரசு என்ற மோசடிக்கு நாம் ஒத்துழைக்க மாட்டோம்.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version