கடனைக் கேட்ட பெண் படுகொலை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொடுத்த கடனைக் கேட்ட பெண் படுகொலை செய்து புதைப்பு! – யாழில் கொடூரம்

Share

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்., மணியந்தோட்டம், உதயபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல்போயுள்ளார் என்று யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் பணம் கொடுக்கலில் ஈடுபட்டு வருபவர் எனவும், குடும்பம் ஒன்றுக்குக் கொடுத்த 3 இலட்சம் ரூபா பணம் வாங்கச் சென்றபோதே காணாமல்போயிருந்தார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில், மணியந்தோட்டம் பகுதியில் குறித்த பெண்ணிடம் பணம் வாங்கிய குடும்பத்தினரை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தி இருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், பணம் வாங்கிய குடும்பத்தினர், அப்பெண்ணைப் படுகொலை செய்து, அவர்களது வீட்டுக்குப் பின்னால் புதைத்துள்ளனர் எனவும், அவரது மோட்டார் சைக்கிளையும் புதைத்துள்ளனர் எனவும் என்ற சந்தேகத்தில் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள நீதிமன்றில் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

அதேவேளை, குறித்த வீட்டில் வசித்து வந்த கணவன், மனைவி மற்றும் அவர்களுக்கு உதவிய குற்றத்தில் ஒருவருமாக மூவரைக் கைதுசெய்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...