வெட்டிப் படுகொலை
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டில் கொலைக் கலாச்சாரமும் அதிகரிப்பு!!

Share

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கொலைக் கலாச்சாரமும் கோலோச்சியுள்ளது. கடந்த 5 நாட்களுக்குள் மாத்திரம் 7 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், வெட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டுபாய் உட்பட வெளிநாடுகளில் பதுங்கி வாழும் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கட்டத்தல் காரர்களில் உத்தரவுகளுக்கமையவே துப்பாக்கிச்சூட்டு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் பரந்தப்பட்ட விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன.

நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி இந்த கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன எனவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் கடத்தலுக்கு சாட்சியாக இருந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படடுள்ளது.

நாட்டில் அண்மைக்காலமாக பெருந்தொகை போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். அவர்களுக்கு துப்பு – தகவல் வழங்கியவர்களே தற்போது கொலை செய்யப்பட்டு வருகின்றனர் என இலத்திரனியல் ஊடமொன்று செய்தி வெளியிட்டுளளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 657a8557d51bd md
செய்திகள்இலங்கை

காய்கறி விலையில் கடும் அதீத உயர்வு: பச்சை மிளகாய் 1,000 ரூபாயைத் தாண்டியது; மக்கள் கடும் அவதி!

இலங்கையின் சில பகுதிகளில் தாழ்நிலக் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத உயர்வை எட்டியுள்ளதாகச்...

25 6943e3aa87891
செய்திகள்உலகம்

தன்னை ‘ஹீரோவாக’ காட்டிக்கொள்ள 12 நோயாளிகளைக் கொன்ற மருத்துவர்: பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு!

பிரான்சில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் மரணத்திற்கு காரணமான...

1813418 flight12
செய்திகள்இந்தியா

அடர்ந்த மூடுபனி: டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

674b2a65b606d hardik pandya in frame 191544440 16x9 1
விளையாட்டுசெய்திகள்

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி: 16 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா புதிய சாதனை!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான 5-ஆவதும் கடைசியுமான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில்...