8 e1652884178785
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்ணீரால் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம்! – தமிழர் தேசமெங்கும் மக்கள் உணர்வெழுச்சி 

Share

இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்காலில் இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒரு குறுகிய நிலப்பரப்பில் முடங்கி இருந்த வேளையில் அவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் கொன்றொழிக்கப்பட்ட தமிழினப் படுகொலையின் – பேரவலத்தின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

அதேபோன்று தமிழர் தாயகம் எங்கும் மற்றும் புலம்பெயர் தேசம் எங்கும் இந்நாள் பெரும் உணர்வுபூர்வமாக அமைதியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நிகழ்வில் இறுதிப் போரில் தனது ஒரு கையை இழந்து பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றியமையைத் தொடர்ந்து ஏனைய மக்கள் தமது உறவுகளுக்கான சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடிய காலகட்டத்தில் மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்கு முகம் கொடுத்த வேளையிலே, அந்த மக்கள் உணவுத் தேவைக்காக பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்த நிலையில், முள்ளிவாய்க்காலில் அவர்களது பசி போக்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பல்வேறு தரப்பினராலும் இன்றும் வழங்கப்பட்டது.

3

11 1 e1652884364132

7

9 e1652884533997

10 e1652884627592

2

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...