வடமராட்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடமராட்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

Share

இறுதிப் போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளை நினைவேந்தும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ வார நிகழ்வு யாழ்., வடமராட்சி, பருத்தித்துறை – முனைப் பகுதியில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று மாலை 4 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதில் பருத்தித்துறை நகர சபையின் தலைவர் யோ.இருதயராஜா, பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.சா. அரியகுமார், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர்கள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் உயிர்நீத்த உறவுகள் நினைவாக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வின் இறுதியில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கப்பட்டது.

IMG 8831

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...