tamilni 46 scaled
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போன்று திருகோணமலையிலும் ஏற்படும் நிலை

Share

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போன்று திருகோணமலையிலும் ஏற்படும் நிலை

பேரினவாத ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்தாவிட்டால் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலை சம்பவம் போன்று திருகோணமலையிலும் ஏற்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை – சாம்பல்தீவு பாலத்திற்கு அருகில் சட்டவிரோத பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் தலைநகரமான திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்தும் திட்டமிட்டப்பட்ட வகையில் சூட்சுமமாக சிங்கள – பௌத்த பேரினவாதம் கபளீகரம் செய்து வருகின்றதை ஏற்றுக் கொள்ள முடியாது என கனகரத்தினம் சுகாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சைவ கிறிஸ்தவ ஆலயங்கள் அதிகம் காணப்படும் பகுதிகளில் திட்டமிடப்பட்ட வகையில் சட்டவிரோதமாக பிரதேசசபையின் அனுமதி இன்றி இன்னொரு பௌத்த விகாரை கட்டப்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஜக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச நிறுவனங்கள் நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு காலதாமதம் செய்யாது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இல்லையென்றால் முள்ளிவாய்க்காய் பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலை சம்பவம் போன்று திருகோணமலையிலும் இடம்பெறும் எனவும் கனகரத்தினம் சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...