15 28
இலங்கைசெய்திகள்

சி.ஐ.டிக்கு விரைந்த திசைக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்

Share

சி.ஐ.டிக்கு விரைந்த திசைக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன (Kaushalya Ariyarathna), தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான செய்திகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் போலிச் செய்திகள் மூலம் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஆதாரமற்ற கூற்றுக்கள் பரப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்தவர்கள், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தீங்கிழைக்கும் மற்றும் தவறான செய்திகள் தொடர்பில் முறைப்பாடளித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இவ்வாறான விடயங்கள் மூலம் பெண்கள் அரசியலில் இணைவதை தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா கூறியுள்ளார்.

இதுபோன்ற இழிவான தந்திரோபாயங்கள் பெண்கள் அரசியலில் சேருவதைத் தடுக்கும் என்று யாராவது நம்பினால், அவர்கள் தவறாக நினைக்கிறார்கள். இந்த தந்திரங்களால் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...