Weather
இலங்கைசெய்திகள்

நகரும் தாழமுக்கம் – நாட்டில் பலத்த மழை

Share

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், கிழக்கு கடற்கரை ஊடாக இலங்கையை கடக்க ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 3
இந்தியாசெய்திகள்

கரூர் சோக சம்பவம்! டெல்லிக்கு பயணமாகும் ஆதவ் அர்ஜூனா

தவெக பரப்புரை பேருந்து கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்படைக்கக் கோரி ஆதவ் அர்ஜுனாவுக்கு பொலிஸார் மனு...

11 3
இலங்கைசெய்திகள்

நாட்டில் மீண்டும் உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை

தம்புள்ளை பொருளாதார மையத்தில் தற்போது ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை ரூ.1800 முதல் 2000...

10 3
இலங்கைசெய்திகள்

மதுபானசாலைகள் பூட்டப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் உள்ள மதுபானசாலைகளை நாளை (03) மூடுவதாக மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது. உலக மது ஒழிப்பு தினம்...

9 3
இந்தியாசெய்திகள்

அவர் சொன்னால் விஜய் உடனே கைது

நடிகர் விஜய் கரூரில் அரசியல் பிரச்சாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்....