கோட்டாபய 2 1000x600 1
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவுக்கு எதிரான பிரேரணை: விவாத முயற்சி தோற்கடிப்பு!

Share

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சி ஆளுங்கட்சியால் தோற்கடிக்கப்பட்டது.

ஜனாதிபதிக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்குக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பை வெளியிட்டது.

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதற்காக, நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்தும் யோசனையை எதிரணியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்தார். அதனை ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. லக்‌ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்தார்.

இந்த யோசனைக்கு ஆளுங்கட்சி உடன்படவில்லை. நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார். இதையடுத்து சுமந்திரனின் யோசனை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது நிலையியல் கட்டளையை இடைநிறுத்த ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றதால் ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை விவாதத்துக்கு வரவில்லை.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...