செய்திகள்இலங்கை

யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாய் கொவிட்டால் சாவு!

Share
WhatsApp Image 2021 09 10 at 21.10.01
Share

யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த இளம் தாய் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இணுவிலை சேர்ந்த 25 வயதுடைய அஜந்தன் இனியா என்ற கர்ப்பிணிப் பெண்ணே யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 4ஆம் திகதி இவருக்கு முச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அவருக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளன. அவர் தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

குழந்தைகள் இரண்டும் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளன.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

 

யாழில் கொரோனாவால் ஒரு வயதுக் குழந்தை சாவு!!

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...