Vaccine
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பூஸ்டர் டோஸை செலுத்திய சில மணி நேரத்தில் உயிரிழப்பு

Share

வவுனியாவில் கொவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற்றவர் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா – காத்தார் சின்னக்குளத்தை சேர்ந்த 54 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார். இருப்பினும் குறித்த நபரின் மரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

குறித்த நபர் மகாறம்பைக்குளம் பொது நோக்கு மண்டபத்தில் நேற்று நடத்தப்பட்ட பூஸ்டர் டோஸ் வழங்கும் முகாமில் தடுப்பூசியைப் பெற்றார்.

மேலும் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய, கொவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸைப்பெற்ற பின்னர் சிறிது நேரம் அங்கேயே காத்திருந்து விட்டு துவிச்சக்கரவண்டியில் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீடுதிரும்பிய அவர் சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் உடலை உறவினர்கள் உடனடியாக வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஏற்கனவே, அவர் சில நோய்களுக்கு உள்ளாகியிருந்தார் என கூறப்படுகின்றது. அவரின் உடலை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தவும், பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...