வவுனியாவில் கொவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற்றவர் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா – காத்தார் சின்னக்குளத்தை சேர்ந்த 54 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார். இருப்பினும் குறித்த நபரின் மரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
குறித்த நபர் மகாறம்பைக்குளம் பொது நோக்கு மண்டபத்தில் நேற்று நடத்தப்பட்ட பூஸ்டர் டோஸ் வழங்கும் முகாமில் தடுப்பூசியைப் பெற்றார்.
மேலும் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய, கொவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸைப்பெற்ற பின்னர் சிறிது நேரம் அங்கேயே காத்திருந்து விட்டு துவிச்சக்கரவண்டியில் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
வீடுதிரும்பிய அவர் சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் உடலை உறவினர்கள் உடனடியாக வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஏற்கனவே, அவர் சில நோய்களுக்கு உள்ளாகியிருந்தார் என கூறப்படுகின்றது. அவரின் உடலை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தவும், பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment