306730057 6451376044889937 5089605678990257021 n
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு மேலும் நிதியுதவி!

Share

இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா ரொய்ட்டர்ஸ் செய்திசேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

ஓகஸ்ட் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 70.2 வீதத்தை எட்டியுள்ளதாகவும், உயர் பணவீக்கத்தினால் மக்களின் வாழ்க்கை முறையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இந்த சவாலான நேரத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இலங்கைக்கு ஆதரவாக செயற்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு, கடனாளிகளிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெற்று ஏனைய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கை நிறைவேற்றுச் சபையின் அனுமதியைப் பெறுமென தாம் நம்புவதாக தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டத்தை நிறைவு செய்த பின்னர், இலங்கையை இந்த நெருக்கடியிலிருந்து காப்பாற்ற கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் என்று கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 133
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பயங்கரம்: இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12, 2026) இடம்பெற்ற மோதலில்...

world 132
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான உடன்படிக்கை சாத்தியமானது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் நம்பிக்கை!

அமெரிக்கா தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்து நடந்தால், இரு நாடுகளுக்கும்...

world 130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் முறைகேடு: சி.ஐ.டி-யில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புகார்!

நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி (Tender) செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை...

world 136
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசியப் பூங்காவில் சட்டவிரோத வேட்டை: 92 கிலோ இறைச்சியுடன் இருவர் கைது!

யால தேசியப் பூங்காவின் 02-ம் மண்டலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை...