24 66395bbed4e2b
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வங்கிகளுக்கு வருகிறது பணம்

Share

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வங்கிகளுக்கு வருகிறது பணம்

நெற்செய்கைக்கான பூந்தி உரம் அல்லது மியூரேட் ஒப் பொட்டாஷ் (MOP) கொள்வனவுக்கான பணம் இன்று (7) முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு ஹெக்டேருக்கு 15000 ரூபாய் வீதம் பணம் வரவு வைக்கப்படவுள்ளது.

கடந்த சில பருவங்களில் நெல் சாகுபடிக்கு பூந்தி உரமிடுதல் அளவு குறைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நெற்பயிர்களை வலுப்படுத்துவதற்கும், நெல் விதைகளை முழுமையாக்குவதற்கும் எம்ஓபி உரத்தைப் பயன்படுத்துவது கட்டாயம் என்று விவசாயத் திணைக்களம் குறிப்பிடுகிறது.

அதிக பருவத்தில் எம்ஓபி உரம் 30,000 மெட்ரிக் தொன் தேவை என்றாலும், அதில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே விவசாயிகள் கொள்முதல் செய்துள்ளனர்.

குறிப்பாக நெற்செய்கையை முடித்துள்ள விவசாயிகளுக்கு இந்த நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...