202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்

ATM அட்டை மூலம் பண மோசடி! – ஒருவர் கைது

Share

ATM இயந்திரம் அமைந்துள்ள பிரதேசங்களில் காத்திருந்து நபர்களை ஏமாற்றி அவர்களது ஏரிஎம் அட்டைகளை தந்திரமாக பெற்று 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை மோசடி செய்துள்ள நபரொருவரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட போது குறித்த நபரிடம் பல்வேறு நபர்களுக்கு உரிமையான 8 வங்கி அட்டைகள் காணப்பட்டதாகவும் அவரைக் கைதுசெய்த கடுவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கடுவலையிலுள்ள அரச வங்கியொன்றிற்கு அருகில் இருந்து 40 தடவைகளுக்கு மேல் பல்வேறு நபர்களை ஏமாற்றி 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் கடுவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் இவ்வாறு பியகம, மாலபே பிரதேசங்களிலுள்ள தனியார் மற்றும் அரச வங்கிகளில் ATM இயந்திரத்திற்கு அருகில் தங்கியிருந்து இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பல முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மோசடிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து சந்தர்ப்பங்களிலும் தொலைபேசி அழைப்பில் இருப்பது போன்று பாசாங்கு செய்து இயந்திரம் அமைந்துள்ள பகுதியில் பிரவேசித்து கைங்கரியமாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...