24 66a4b6970d838
இலங்கைசெய்திகள்

யாழில் திட்டமிட்டு நடைபெறும் பணமோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

யாழில் திட்டமிட்டு நடைபெறும் பணமோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பிரபல வர்த்தகர்களை இலக்கு வைத்து இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பண மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், யாழ் மாவட்டத்தின் சில பகுதியிலுள்ள வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் ஊடாக இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு நிறுவகத்தில் இருந்து அழைப்பை ஏற்படுத்துவதாக தம்மை அடையாளப்படுத்தும் மோசடியாளர்கள், நீங்கள் உங்களது தொலைபேசி கட்டணங்களை சிறந்த முறையில் செலுத்துவதன் காரணத்தால் உங்களுக்கு பரிசு வழங்கப்படவுள்ளமையினால் அதற்காக உங்கள் அடையாள அட்டை இல மற்றும் வங்கிக் கணக்கு இலக்கம் என்பனவற்றினை தருமாறும் கோருகின்றனர்.

இத்தரவுகள் வர்த்தகர்களினால் வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (OTP) இலக்கம் வங்கியின் பெயரிலேயே அனுப்பப்படுவதாகும் மற்றும் சிலருக்கு வங்கிக்கு பணம் அனுப்பியது போன்று வங்கியின் பிரத்தியேக செயலிக்கே தரவுகள் அனுப்பப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மீள் அழைப்பெடுக்கும் மர்மநபர்கள் அவ் குறித்த இலக்கங்களினை கோருவதாக சுட்டிக்காட்டிய வர்த்தகர்கள் தாம் சந்தேகமடைந்து அந்த இலக்கத்தை மீளத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர் அத்தோடு இவ்வாறான மோசடியால் பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள காவல் நிலையங்களில் அறிவிக்குமாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...