24 66a4b6970d838
இலங்கைசெய்திகள்

யாழில் திட்டமிட்டு நடைபெறும் பணமோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

யாழில் திட்டமிட்டு நடைபெறும் பணமோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பிரபல வர்த்தகர்களை இலக்கு வைத்து இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பண மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், யாழ் மாவட்டத்தின் சில பகுதியிலுள்ள வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் ஊடாக இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு நிறுவகத்தில் இருந்து அழைப்பை ஏற்படுத்துவதாக தம்மை அடையாளப்படுத்தும் மோசடியாளர்கள், நீங்கள் உங்களது தொலைபேசி கட்டணங்களை சிறந்த முறையில் செலுத்துவதன் காரணத்தால் உங்களுக்கு பரிசு வழங்கப்படவுள்ளமையினால் அதற்காக உங்கள் அடையாள அட்டை இல மற்றும் வங்கிக் கணக்கு இலக்கம் என்பனவற்றினை தருமாறும் கோருகின்றனர்.

இத்தரவுகள் வர்த்தகர்களினால் வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (OTP) இலக்கம் வங்கியின் பெயரிலேயே அனுப்பப்படுவதாகும் மற்றும் சிலருக்கு வங்கிக்கு பணம் அனுப்பியது போன்று வங்கியின் பிரத்தியேக செயலிக்கே தரவுகள் அனுப்பப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மீள் அழைப்பெடுக்கும் மர்மநபர்கள் அவ் குறித்த இலக்கங்களினை கோருவதாக சுட்டிக்காட்டிய வர்த்தகர்கள் தாம் சந்தேகமடைந்து அந்த இலக்கத்தை மீளத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர் அத்தோடு இவ்வாறான மோசடியால் பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள காவல் நிலையங்களில் அறிவிக்குமாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...