செய்திகள்அரசியல்இலங்கை

இன நலனுக்காக நல்லூர் ஆலய சூழலில் அணிதிரளுங்கள்!! – த.தே.ம.மு அழைப்பு

Share
20220127 100122 scaled
Share

13ஜ பற்றியும் எங்களது செயற்பாடுகள் பற்றியும் பல்வேறுபட்ட விசமத்தனமான பிரச்சாரங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு நீங்கள் எடுபடாது இன நலனுக்காக எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி நல்லூர் ஆலய சூழலில் ஒன்றுகூட வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஷ் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் திரட்சியையும் பேரணியையும் குழப்புவதற்காக பொய்ப் பிரசாரங்கள் நன்கு கச்சிதமாக திட்டமிடப்பட்ட வகையில் பரப்பப்பட்டு வருகின்றன.

நேற்றையதினம் இந்த ஊடக சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்ட நேரம் முதல் பல்வேறுபட்ட சதி முயற்சிகள்,
இடம்பெறுவதாக நம்பகரமாக நாம் அறிகின்றோம்.

ஆகவே பொதுமக்கள் எங்கள் அறிக்கைகளை அவதானித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். போலிப் பிரசாரங்களை கருத்தில் எடுக்கக்கூடாது.

இந்த விடயத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும். பேரணி கைவிடப்பட்டதாக கூட பொய்யான செய்திகள் பரப்பபடலாம். ஆகவே திட்டமிட்ட வகையில் எமது போராட்டம் இடம்பெறும்.

எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய அனைவரும் குறைந்தபட்சம் 2 மணி வரையாவது உங்கள் வியாபார வர்த்தக செயற்பாடுகளை முற்றாக நிறுத்தி எங்களது பேரணிக்கு பூரணமான ஆதரவை வழங்க வேண்டும்.

13ஜ பற்றியும் எங்களது செயற்பாடுகள் பற்றியும் பல்வேறுபட்ட விசமத்தனமான பிரச்சாரங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு நீங்கள் எடுபடாது இன நலனுக்காக எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி காலை 9.30மணிக்கு நல்லூர் ஆலய சூழலில் ஒன்றுகூட வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...