Arrested 611631070
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீதியில் மோ. சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகள் அபகரிப்பு – இருவர் சிக்கினர்

Share

வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகளை அபகரித்த இருவர் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி கல்வியங்காடு – செம்மணி, ஆடியபாதம் வீதியில் வைத்து வவுனியாவைச் சேர்ந்த தம்பதியிடம் தாலிக் கொடி, சங்கிலி என 15 தங்கப் பவுண் நகைகள் வழிப்பறிக் கொள்ளை செய்யப்பட்டன.

சம்பவம் தொடர்பில் அன்றைய தினமே கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

வவுனியாவிலிருந்து வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற திருமண நிகழ்வுக்கு வருகை தந்து திரும்பிய போதே சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் நாவற்குழியைச் சேர்ந்த 19 மற்றும் 22 வயதுடைய இருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிட்ட நகைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...