Kilinochchi death 02
இலங்கைசெய்திகள்

காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

Share

புத்தளம் , ஆனமடுவ, பல்லம குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆனமடுவ, சேருகெலே பகுதியைச் சேர்ந்த 48 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் மாத்திரம் நேற்று முன்தினம் காணாமல் போயுள்ளார்.

இவ்வாறு காணாமல் போன குடும்பஸ்தரை அப்பிரதேச பொதுமக்களின் உதவியுடன் தேடியும் அன்றைய தினம் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் இதுபற்றி பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டதுடன், காணாமல் போன குடும்பஸ்தரை தேடுவதற்காக கடற்படையினரின் உதவியும் பெறப்பட்டது.

அதன்பின்னர் கடற்படையினர் குறித்த குளப் பகுதியில் தேடுதல் நடத்தியபோது, காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் நேற்று (17) சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNEws

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...